கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை!!

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.

அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 38 பேர் இணைந்து ஒரு மணி நேரத்தில் 1530 குறட்பாக்களை  அதிக எண்ணிக்கையில்  பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரூபி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமி தீபா பிரகாஷ் சோழன் உலக சாதனை புத்தகத்தின் செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், கோவைமாவட்ட பொதுச் செயலாளர்  திலகவதி மற்றும் டாக்டர் ஷர்மிளா ராம் ஆனந்த், ஆர்.கே. ராம் ஆனந்த்  ராஜன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments