புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரங்கராசு, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் முத்துக்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா,மெய்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி சண்முகம், கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன்,புதுநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மொழி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தமிழ் கூடல் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மாணவர்களின் கலை, நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை தமிழாசிரியர் சசிகலா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சுதா, குழந்தை வடிவேல், ஆய்வக உதவியாளர் மல்லிகா, உதவியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டு விழாவில் இளைஞர்கள் பொதுமக்கள் ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஆசிரியர் கணபதி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments