இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ் பெண்டு என்ற பகுதியில் கேரளா திருச்சூர் போக்கஞ்சேரி பகுதியில் உள்ள அஸ்வின்(35) ஸ்ரீதேவி(30) என்பவர்கள் வால்பாறை சுற்றி பார்த்து விட்டு சாலக்குடி வழியாக திருச்சூர் சென்றுகொண்டிடுந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மழுக்க பாறை பகுதியில் செக் போஸ்டில் ஐந்து மணிக்கு மேல் எந்த வாகனமும் செல்ல விடுவதில்லை என்பதால் அவர்கள் திரும்பி பொள்ளாச்சி வழியாக செல்வதற்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது வரட்டுப்பாறை என்ற இடத்தில் எஸ் பெண்டு அருகாமையில் வால்பாறையில் இருந்து பெரியார் நகரைச் சேர்ந்த காளிதாஸ்(34) உதயகுமார்(51) என்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.
அதில் காளிதாஸ் உதயகுமார் என்பவர் படுகாயம் அடைந்தனர். 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்பு காளிதாஸ் உதயகுமார் இருவரையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்பகுதிகளில் விபத்து நடக்கும் பகுதியாக மாறி உள்ளது. இதனைக் கண்டு சாலை அமைப்பு அதிகாரிகள் வேகத்தடைகள் அமைத்தால் சில விபத்துக்களை வராமல் தடுக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments