மழலை குழந்தைகள் திருக்குறள் மற்றும் பழமொழிகளை கூறி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்!!

கோவை  நீலாம்பூர் பகுதியில் தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அங்குரம் பாடசாலா இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் தமிழ் நன்னெறி நூல்கள் மற்றும் பழமொழிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி 83 மழலை பள்ளி மாணவ மாணவிகள் 5 நிமிடத்தில்  35-க்கும் அதிகமான திருக்குறள் மற்றும் பழமொழிகளை உடல் மொழி அசைவுகளோடு சொல்லி புதிய உலக சாதனை படைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்நிகழ்ச்சியில்,   40 மாணவர்கள் திருவள்ளூவர் போல வேடமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அங்குரம் பாடசாலா நிறுவனர் மருத்துவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திலகவதி முருகேசன்  முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, உலக சாதனை செய்த மழலை குழந்தைகளுக்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் ஆய்வு செய்து அங்கீகார சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments