தெய்வத்தமிழ் வழிபாட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கூட்டத்திற்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதில் கோவை மாவட்ட கலை இலக்கிய தமிழ் சமுதாய அமைப்புகளின் சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக தாய் மொழி நாள் பேரணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் கோவை சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருந்து தாய்மொழி நாள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments