குளத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பாஜகவினர்!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேபோன்று இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில், ஒன்றிய தலைவர் பார்த்திபன் தலைமையிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் முன்னிலையிலும் குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் உத்தன்டு ராமன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி சிறப்புரையாற்றியபோது; இந்த மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்களையும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் பொதுமக்களிடையே தெரிவித்தனர். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றியும், அதனை எதிர்க்கும் திமுக அரசை விமர்சனம் செய்தும் பேசினர். அதேபோன்று மத்திய பாஜக அரசின் ஜல்ஜீவன் திட்டம், தொழிற்கடன், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள், சாலைகள் என பல்வேறு சாதனைகளை பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச் செயலாளர் சுயம்பு, ஒன்றிய பொதுச் செயலாளர் தங்க மாரியப்பன், அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அரசன், சுபி பிரேம், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் லீலாவதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஸ்வரன், தங்க முனீஸ்வரன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் கனகராஜ், இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர்கள் புவனேஸ்வரன், சுரேஷ், கண்ணன், ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜ பெருமாள், மருத்துவ பிரிவு ஒன்றியத்தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந. பூங்கோதை.
Comments