கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை..! விவசாயிகள் மகிழ்ச்சி!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம்,100 அடி சாலை, சித்தாபுதூர், ராம் நகர்,பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதியில் நேற்று இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

மேலும் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இரவு கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒன்றரை மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் இரவு கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம்:

சிறுவாணி அடிவாரம்- 43 மி.மீ, கோவை தெற்கு தாலுகா ஆபிஸ்- 39 மி.மீ, சின்கோனா- 27 மி.மீ, சின்னக்கல்லார்- 26 மி.மீ, சூலூர்- 24.2 மி.மீ, பில்லூர் அணை- 22 மி.மீ, கிணத்துக்கடவு- 20 மி.மீ, வேளாண் பல்கலை - 20 மி.மீ, குருந்தன் கோடு - 34 மி.மீ, தங்கச்சிமடம்- 37.2 மி.மீ, மண்டபம்- 23.2 மி.மீ, பார்வுட்- 65 மி.மீ, கெத்தை- 42 மி.மீ, கிண்ணக்கொரை -39 மி.மீ, தேவாலா- 37 மி.மீ, கூடலூர் பஜார் -34 மி.மீ, பந்தலூர்- 34 மி.மீ, அப்பர் கூடலூர்- 32 மி.மீ, குந்தா பாலம்-30 மி.மீ, கீழ்க்கோத்தகிரி-26 மி.மீ, கோடநாடு-25 மி.மீ,குன்னூர்-21 மி.மீ, நல்லதங்காள் ஓடை-40 மி.மீ, குண்டடம்-32 மி.மீ, ஆசனூர்-32.4 மி.மீ, நாயக்கன்பாளையம்- 80 மி.மீ, ராம பட்டினம்- 73.6 மி.மீ, நெகமம்- 56.8 மி.மீ, துடியலூர்- 37.6 மி.மீ, தோலம்பாளையம்- 36 மி.மீ, எலவந்தி- 97.6 மி.மீ, கொளத்தூர் பாளையம்- 58.8 மி.மீ, சங்கரண்டாம்பாளையம்- 54 மி.மீ, மடத்து பாளையம்- 36.4 மி.மீ பதிவாகி உள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments