மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தியாகி இமாவேல் சேகரனின் 67வது குருபூஜை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இதில் திருநெல்வேலி ராமநாதபுரம் மதுரை தூத்துக்குடி விருதுநகர் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கொண்டு சீறிப்பாய்ந்தன விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்த போட்டியில் இரு பிரிவுகளாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மயில் தூரம் மற்றும் சிறிய மாடுகளுக்கு 4 மைல் தூரமும் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி தேனி ராமநாதபுரம் சேர்ந்த மாட்டுவண்டிகள் வெற்றி பெற்றன இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு சமுதாயத் தலைவர் செந்தூர்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,

-ந.பூங்கோதை.

Comments