புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 12-வது வார்டு துளசிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7- லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்கள். 

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் பேரூர் கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி வார்டு உறுப்பினர்கள் செல்வகுமார், 

கலைச்செல்விமுத்து கணேஷ் செண்பகராஜ் வார்டு செயலாளர் ராஜதுரை கழக உறுப்பினர்கள் ராஜகோபால்,காத்தம்மாள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments