கோவையில் பயங்கரம்...!! குடிபோதையில் வாலிபர் கொலை!!!

 
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் முன் விரோதத்தினால் குடிபோதையில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 26). இவர் நேற்று மாலை செல்வபுரம் அடுத்த அசோக் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக சென்று உள்ளார். 

அப்போது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து கோகுல கிருஷ்ணன் மது அருந்தி உள்ளார். மது அருந்திய நிலையில் போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் நான்கு பேர் சேர்ந்து கோகுல கிருஷ்ணனை கத்தியால் வெட்ட முயன்று உள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுல கிருஷ்ணன், உயிர் தப்பிக்க அங்கிருந்து ஓடி உள்ளார். இருப்பினும் கோகுல கிருஷ்ணனை விடாமல் துரத்திய உறவினர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இதில் படுகாயமடைந்த கோகுல கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை தொடந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செல்வபுரம் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்தனர். 

செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் உயிரிழந்த கோகுல கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கெம்பட்டி காலனியில் கோகுல கிருஷ்ணனுக்கும், அவரது உறவினர்கள் சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. டிவி ஒலியை சத்தமாக வைத்த பிரச்சனையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக  உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் உறவினர்கள் சிலருடன் குடிபோதையில் மீண்டும் இந்த பேச்சு எழுந்த உள்ளது. இந்நிலையில் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கோபால கிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments