தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.80 ஆயிரம் சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!!

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் LAW OFFICER போன்ற பல்வேறு பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BL/LAW தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 - ரூ.80,000/- வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடவும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Comments