அதிமுக சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ உ சி சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை மற்றும் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மோகன் வளர்மதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன் மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments