கோவையை சேர்ந்த நபரிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்த 4 வடமாநில வாலிபர்கள் கைது!!!

கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்தவர் ராமசாமி (30). இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் வந்தது. அதில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் மற்றும் கமிஷன் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

இதனை நம்பிய ராமசாமி அதில் உள்ள லிங்கில் சென்று தனது விவரங்களை பதிவு செய்தார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து பேசுவதாகவும், தனது பெயர் சத்யநாராயணன் என தெரிவித்தார். பங்கு சந்தையில் அதிக லாபம் வரும் என அவரது ஆசை வார்த்தையில் நம்பிய ராமசாமி அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 9 லட்சம் பணம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி லாப தொகையும் திருப்பி தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் தராமல் காலம் கடத்தி வந்தனர். அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. 

இது குறித்து ராமசாமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நூதன மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்து சென்று ரூ. 9 லட்சம் மோசடியி்ல் ஈடுபட்ட ஜோத் பூரை சேர்ந்த சத்யநாராயணன்,சவுத்ரி (20), சுனில் சரண் (23),சந்தீப்( 28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments