குடிநீர் இணைப்பு வழங்க கால தாமதம் செய்யும் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!
தோவாளை தாலுகா, பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்ட பூதப்பாண்டி அழகம்மன் கோவில் தெருவில் வடிகால் ஓடை தோண்டும் பணிக்காக அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வடிகால் ஓடை பணி முடிவடைந்த நிலையிலும் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பினை இணைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் இப்பகுதி பொதுமக்கள் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மேல் கடும்கோபம் கொண்டு அழகம்மன் கோவில் தெரு பொதுமக்கள்காலி குடங்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனியும் காலம் தாழ்த்தினாள் பூதப்பாண்டி பேரூராட்சியினை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்துவோம் என போர்முழக்கமிட்டனர்.
பெண்களை வீதிக்கு போராட்டத்திற்கு கொண்டு வந்த பேரூராட்சி நிர்வாகத்தினை பூதப்பாண்டி ஊர் பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எஸ். நாராயணசாமி மற்றும் அழகப்பன் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்க வைத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.
Comments