வேலூரில் நவீன வசதிகளுடன் கூடிய காவல்துறை கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் !! தமிழக D.G.P டாக்டர் திரு C.சைலேந்திரபாபு அவர்கள் திறந்து வைத்தார்!!!
தமிழக D.G.P டாக்டர் திரு C.சைலேந்திரபாபு அவர்கள் திறந்து வைத்தார்!!!
வேலூர் மாவட்டத்தில் காவல் துறையின் கண்காணிப்பை அதிகரிக்கும் பொருட்டு (06-06-2023 செவ்வாய் கிழமை) சுமார் 5.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட நவீன காவல்துறை கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் தமிழக D.G.P டாக்டர் C.சைலேந்திரபாபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நவீன காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில எல்லை சோதனை சாவடிகள், அனைத்து காவல் நிலையங்கள், மற்றும் அனைத்து முக்கிய இடங்களை இணைக்கும் 1200 சிசிடிவிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கலாம்.
ஒரே இடத்தில் அமர்ந்து மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்ற செயல்கள்,மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க முடியும். இதற்கு மூளையாக செயல்பட்டவர் முன்னாள் எஸ். பி. திரு எஸ்.ராஜேஷ் கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் தான். இதனை தற்போதைய எஸ்.பி. திரு என். மணிவண்ணன் அவர்கள் கண்காணித்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தில் இதுபோன்று நவீன வசதியுடன் கூடிய காவல்துறை கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதில் மையம் அமைவது இதுவே முதல் முறை என்பதில் காவல்துறையினர் பெருமை கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சி.ராஜேந்திரன்.
Comments