பொள்ளாச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க கட்டுமான பணி பூமி பூஜை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்த இதுவரை கலையரங்கம் இல்லாத நிலையில் தற்சமயம் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஏ.கோமதி.பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ஜெய்னுலாப்தீன் துணைத்தலைவர் காளிமுத்து.
துணைச்செயலாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ், மணிகண்டன் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments