டீக்கடையில் தகராறு இருவர் கைது!!
கோவை சிங்காநல்லூரில் உள்ள ஆவின் விற்பனையகத்தில் கார்த்திக், 27. டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் டீக்கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது அங்கு குடிபோதையில் வந்த மதுரை பேரையூரை சேர்ந்த அஸ்வின் ராஜன், 21, கோவை தீத்திபாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கவின், 24 ஆகிய இருவரும் கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், கார்த்திக்கை தாக்கினர். இதுகுறித்த தகவலின்பேரில், சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வாலிபர்களை பிடித்து விசாரணை செய்து இருவரையும் கைது செய்தனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments