கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்! உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி!!
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை பாலக்காடு ரோடு, ஈச்சனாரி சோதனைச்சாவடியில் நேற்று மாலை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், கோவையில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவது தெரிந்தது. இதையடுத்து, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அனிஷ், 30 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1,015 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments