பாஜக நிர்வாகியை முகநூலில் அசிங்கப்படுத்திய பாஜக பெண் நிர்வாகி கைது!!
திருச்சியில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக பிரமுகரின் முகநூல் கணக்கை ஹேக் செய்த பாஜக பெண் நிர்வாகியை அதிரடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்ட பாஜக பொது செயலாளராக இருப்பவர் காளீஸ்வரன். சில நாட்களுக்கு முன்பு இவரது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
அதன்பின்பு அவரது முகநூல் பக்கத்திலேயே அவரைப் பற்றி தவறாக சித்தரித்து அடிக்கடி பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து காளீஸ்வரன் திருச்சி மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சிந்துநதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் காளீஸ்வரன் முகநூல் கணக்கை ஹேக் செய்தது தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ரவி முத்துக்குமார் (42) என்பது தெரிய வந்தது.
ரவி முத்துக்குமாரை முழுமையாக விசாரணை செய்ததில் இதற்கு முழுக்காரணம் திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வரும் திலகா (50) என்பது தெரியவந்தது. பிபிஏ பட்டதாரியான திலகா, திருச்சி மாவட்ட பாஜக விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இதற்கிடையே, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள, கல்லணை பகுதியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு தர இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது புறநகர் மாவட்ட செயலாளராக உள்ள அந்தப் பெண் நிர்வாகி, ரயில்வே செனட் உறுப்பினராகவும் உள்ளார். தனக்கு டம்மியான பதவியை கொடுத்து விட்டு, புறநகர் மாவட்டச் செயலாளருக்கு மாநில பொறுப்பு வழங்கப்படுவது திலகாவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தனக்கு டம்மி பதவி வழங்கப்பட்ட விரக்தியில் காளீஸ்வரனின் முகநூல் பக்கத்தில் ஆபாசப் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மிளகா மற்றும் முத்துக்குமார் இருவரையும் திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
-மூன்றாம் கண்.
Comments