விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீதை இரா.ஜெயராமகிருஷ்ணன் வழங்கினார்!!
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி இராமேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு .தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீதை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் K.ஈஸ்வரசாமி (ஒன்றியகுழு துணை தலைவர்) மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் P.S.தங்கராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசெந்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜோதிமணி பாலசுப்பிரமணியம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி கௌதம்தங்கராஜ் கிளை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
-துல்கர்னி, உடுமலை.
Comments