கோவையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்!!
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 133 போக்சோ வழக்குகள் பதிவு. கோவையில் கடந்த ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. 133 போக்சோ வழக்குகள் உட்பட 188 குற்றச்சம்பவங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும், புகார் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க, அரசு முன்வர வேண்டும். கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்து, 56 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு எதிராக, பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறினால், 1098 என்ற சைல்டு லைன் தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பாடப்புத்தகங்களிலும், தொடுதல் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில், பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே போகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும், கடந்தாண்டில் குழந்தைகளுக்கு எதிரான 188 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், போக்சோ சட்டத்தின் கீழ், 133 வழக்குகள் பதிவாகியிருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டில் சொற்ப நாட்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், குற்றச்சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments