இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்து உறவுகளே !!
திருவிழாக்களும் பண்டிகைகளும் சுற்றமும் நட்பும் சூழக் கொண்டாடி மகிழத்தான். எனவே, இல்லமெல்லாம் இன்பவொளி வெள்ளம் பாய்ந்தோட தீபாவளியைக் கொண்டாடி மகிழலாம் உறவுகளே!
இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி ஆண்டு தோறும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப் படுகிறது. கி.பி.16ஆம் நூற்றாணடு முதல் கொண்டாடப்படும், மிகத் தொன்மையான தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்காக பலகாரணங்கள் சொல்லப் படுகின்றன.
திருமால் வராக அவதாரம் எடுத்து, அவரது மனைவி பூமாதேவியான சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை வதம் செய்த நாள் என்றும், இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்ற நாள் என்றும், கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார் என்றும் சொல்லப்படும் தீபாவளிப் பண்டிகை சாதி மதம் கடந்து அனைத்து மக்களாலும் கொண்டாடி மகிழப்படுகிறது.
அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து (கங்கா ஸ்நானம்) , புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் உண்டும் பிறர்க்கு வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்தி, பரிசுகள் பரிமாறி, பெரியோர்களிடம் நல்வாழ்த்துப் பெற்றும், இத்தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ போல் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கொண்டாடி மகிழ உளமார வாழ்த்துகிறோம்.
-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.
Comments