முதல்வர் தளபதி ஆணைக்கிணங்க மக்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்...!! மக்கள் சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை..!!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் மூன்றாவது நாளாக மக்கள் சபை நிகழ்ச்சி. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி..
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக மக்கள் சபை கூட்டம் நிகழ்வில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மக்களின் குறைகளை மனுக்கள் மூலம் பெற்று குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட 9 அவுது வார்டு ஹவுஸிங் யூனிட் 5,6,7,8 ,9 வார்டு பகுதிகளுக்கு மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் இதுவரை 150 பகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுவாக பெற்று வருவதாகவும். தளபதி மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவோம் , சாலை பராமரிப்பு முதியோர் ஊக்கத்தொகை , பாதாள சாக்கடை போன்றவைகளை கோரிக்கைகளாக மக்கள் மனு அளித்து வருவதாகவும் இதை பரிசீலனை செய்து விரைவில் முடிவு காணப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்று 3 மாதங்களிலேயே சிறப்பான பல திட்டங்களை மக்களுக்கு அறிவித்து தானளித்த 505 வாக்குறுதிகளில் இரண்டு மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வர்தான் தளபதி மு க ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.
தான் கலந்துகொண்ட மக்கள் சபை கூட்டங்களில் 12000 மேல் மனுக்கள் பெற்றுள்ளதாகவும் அந்த மனுக்கள் நிச்சயமாக பரிசீலித்து நல்ல முடிவு காணப்படும் என்றும் பிரதான பிரச்சினையான மோசமான சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த மகா சபை கூட்டத்தில் கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர் , சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முகம்மது சாதிக் அலி.
Comments