பொது வெளியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்! கண்டு கொள்வார்களா துறை அதிகாரிகள்!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் வால்பாறையில் இருந்தும் பல மக்கள் வந்து தங்களது நோய்களுக்கு மருத்துவ பரிந்துரை மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்கி செல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் சேரும் குப்பைகளையும் மீதமாகும் உணவுகளையும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ பொருட்களையும் அதற்கென முறையாக உள்ள குப்பை கழிவுகள் சேர்க்கும் தொட்டியில் போடாமல் வெளியிடங்களில் போட்டு விடுகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர் எனவே இந்த துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் உள்ள குப்பை கழிவுகளை சரியான முறையில் கையாண்டு சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யா குமார், S.ராஜேந்திரன்.
Comments