கோவை - தீக்காயம் காரணமாக ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு சிகிச்சை!!
கோவை அரசு மருத்துவமனையில் தீபாவளி நாளில் ஏற்பட்ட தீக்காயம் காரணமாக ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டீன் நிர்மலா தகவல் கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில், தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தீபாவளி நாளான 4-ம் தேதி காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு ஒரு குழந்தை உள்பட 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூன்று பேருக்கு கைகளில் லேசான தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது. இவர்கள், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர் என மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments