+2 மாணவி தற்கொலை! - கோவை மாநகர காவல் துறையினர் செய்தி வெளியீடு!!
கோவை உக்கடம் பி 4 காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் இறந்தபோன மாணவியின் தற்கொலைக்கு காரணமாக அந்த (சின்மயா) பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல் தொல்லையும் அதனால் ஏற்பட்ட மனஉழைச்சலுமே காரணம் என தெரிய வந்ததால் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை (31) த/பெ காளிமுத்து என்பரை 12-11-2021 ம்தேதி கைது செய்யப்பட்டு உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவி எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பதையும் மிதுன் சக்ரவர்த்தியை தவிர வேறு யாரேனும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்களா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படுகிறது.
அவர் இறந்து போனதற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments