வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது! உடும்புகளை வேட்டையாடியவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிரடி!!
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் கன்னிமார் கோவில் பகுதியில் வனவர் முத்து தலைமையில் வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அவர்களை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே அங்கு சென்று பார்த்த போது வேட்டையாடப்பட்ட 3 உடும்புகள் மற்றும் வலைகள் இருந்தன.
இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்த னர். விசாரணையில் அவர்கள் காளம்பாளையம் ஊராட்சி பிளிச்சி கவுண்டனூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 41), மணி (42) என்பதும், அவர்கள் 2 பேரும் உடும்புகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.
Comments