இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான 3 மாத பேரக் குழந்தையை கொன்று மற்றொரு குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிய சொந்த பாட்டி! பதபதைக்க வைத்த நிகழ்வு!!
கவுண்டம்பாளையத்தில் 3 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டு 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிய மூதாட்டி. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் நாகப்ப நகர் 3ராவுது வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 31). இவர் ஒரு தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி 24 வயதான ஐஸ்வர்யா. இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (வயது 45) மதுரையில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக சாந்தியின் வீட்டில் வந்து இருந்துள்ளார். சாந்தியின் கணவர் மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் S. S. I ஆக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக ஐஸ்வர்யா,அவரது சகோதரரும் சென்றுள்ளனர். சென்றுவிட்டு வந்த ஐஸ்வர்யா மற்றும் அவரது சகோதரர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி, பெல் அடித்தும் உள்ளனர். சற்று நேரத்துக்கு கதவு திறக்கப்படாத நிலையில் சத்தம் போட்டுள்ளனர். சாந்தி கதவை திறந்ததும் உள்ளே போய் சென்று பார்த்த பொழுது 3 மாத ஆண் குழந்தை ஆரியன் பேச்சு மூச்சின்றி இருந்ததும், பெண் குழந்தையை ஆர்யா ஸ்ரீ கையில் அடிபட்டு அழுதுகொண்டு இருந்திருக்கின்றார்.
பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனே குழந்தைகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் ஆரியன் இறந்துவிட்டதாக கூறியுள்ளதை அடுத்து அந்தக் குழந்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை வைத்து தப்பியோடிய மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தேடி வருகின்றனர். இந்த மூதாட்டி 15 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்துள்ளார். சொந்த பாட்டியே 3 மாத குழந்தைகளை அடித்து கொன்றது அப்பகுதியில் பெரும் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments