வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் அனுமதி!!

     -MMH

     பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு, இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. அங்கு சென்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு, பிப்., முதல், மே வரையிலான, நான்கு மாதங்களுக்கு வனத்துறை அனுமதி வழங்குகிறது.

கடந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டு பிப்., துவங்கியும் தடை நீட்டிக்கப்பட்டது. அரசியல் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால், மலையேற்றத்துக்கு அனுமதிக்க, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதுகுறித்து, கடந்த, 18ம் தேதி, வனத்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. பூண்டி கோவில் நிர்வாகம் சார்பில், கிரிமலை உண்டியல் உள்ளிட்டவற்றுக்கு, 42. 50 லட்சம் ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. அதையடுத்து, 'மலையேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படுமா' என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எகிறியது. இந்நிலையில், நேற்று மாலை, போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனையை தொடர்ந்து இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டது!!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments