சாலையில் சுற்றும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி...!!!
கோவை மாநகரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஆங்காங்கே சாலைகளில் பசு மாடுகளும், காளை மாடுகளும், சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த இடைஞலை ஏற்படுத்துகிறது.
கோவை உக்கடம் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அங்குள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும். தெரிவிக்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் சாலைகளில் இந்த மாட்டை விடுவது தவிர்க்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-ஈஷா,கோவை.
Comments