கோவை உக்கடத்தில் பயங்கர விபத்து! ஒருவர் பலி..!!
கோவை மாவட்டம் B1 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை 10:30 மணி அளவில் உக்கடம் இலிருந்து மதுகரையை நோக்கி சென்றுகொண்டிருந்த, தனியார் பேருந்து (ஸ்ரீ முருகன், 3B,TN 66 7392) கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி மற்றும் டூவீலர் வாகனத்தில் மோதியது சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார்.
மற்றொருவர் மருத்துவமனைக்கு படுகாயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் இந்த கோரா விபத்து மக்களை பீதி அடைய செய்துள்ளது.
போலீசாரின் கழுகு பார்வையில் இருக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தை,பொது மக்களும்,சமூக ஆர்வலர்களும் மிகுந்த வேதனை என்று கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சந்தரமோகன், கிரி,ஹனீப்.
Comments