பொள்ளாச்சியில் இளம் பெண்மாயம்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து உள்ள நல்லாம்பள்ளியை சேர்த்தவர் வீராசாமி இவரது மகள் மதுபிரியா தீடிர் என வீட்டில் இருந்து மாயமானார். இதனை எதிர்பாராத தந்தை வீராசாமி அக்கம் பக்கதிலும் அவரது உறவினர் வீடுகளில் மற்றும் மதுபிரியாவின் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கூடும் என எண்ணி பல்வேறு இடங்களில் தன் மக்களை தேடி அலைந்துள்ளார் .
எங்கு தேடியும் மக்கள் கிடைக்காததால் பயந்துபோன தந்தை வீராசாமி கோமங்கலம் போலீசாருடன் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட கோமங்கலம் போலீசார் மயமான இளம் பெண்னை தீவிரமாக தேடி வருகின்றனர் .
பொள்ளாச்சி பகுதிகளில் இளம்பெண்கள் தீடீரேன மாயமாகும் சம்பவங்களை தடுக்க போலீசார் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு.
Comments