கோவையில் இன்று கொரோனா நிலவரம்!!
-MMH
கோவையில் கொரானா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது.
கோவையில் நேற்று திங்கள்கிழமை சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம் நகர் பகுதிகளைச் சேர்ந்த 290 பேருக்கு புதியதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 208 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று திங்கட்கிழமை வரை 35 ஆயிரத்திற்கும் மேல் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
-அருண்குமார்,கோவை மேற்கு.
Comments