மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு!!
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்னேகா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று கோவைக்கு உட்பட்ட பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த அபார சாதனை பள்ளி வளாகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதே பள்ளியில் பயின்ற மாணவி வித்யா ஸ்ரீ 595 மதிப்பெண்களும், மாணவி நேஹா 581 மதிப்பெண்களும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும்,தலைவருமான சண்முகம் தலைமை...