எஜூகான்வியா 2026 : அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி நடைப்பெற்றது...
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை 28 பிப்ரவரி 2026 அன்று , அமிர்தா பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஹார்மனி சம்மிட் மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதும் இருந்து முன்னணி கல்வி ஆலோசகர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, உருவெடுத்து வரும் கல்வி வாய்ப்புகள், சர்வதேச கல்வி கூட்டாண்மைகள் மற்றும் உயர்கல்வித் துறையின் மாற்றமடைந்து வரும் போக்குகள் குறித்து விவாதிக்கவும், கருத்துகளைப் பகிரவும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது. திரு. கார்லிட்டோ நூன்ஸ் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களும் உலகளாவிய கல்வி சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை வலியுறுத்தினார். ஃப்யூச்சர் கேர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. மனோஜ் மனயத்தோ...
.jpeg)