கோவையில் மே 27 முதல் அகில இந்திய ஆண்கள் - பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்!!
கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) சார்பில் நடத்தப்படும் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் வரும் மே 27 முதல் 31 வரை கோவையில் நடைபெறுகின்றன. கடந்த 58 ஆண்டுகளாக ஆண்கள் பிரிவிலும், 22 ஆண்டுகளாக பெண்கள் பிரிவிலும் இப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கோவை வ.உ.சி. பூங்கா உள்விளையாட்டு கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகள் குறித்து தமிழ்நாடு கூடைப்பந்து கழக துணைத் தலைவரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ஆண்கள் பிரிவில் இந்திய விமானப்படை, இந்திய இராணுவம், இந்திய கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கேரள போலீஸ் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் சவுத...