கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான் போட்டி: வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!
கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 7 மாநிலங்களை சேர்ந்த 112 வீரர்கள் களத்தில் இறங்கி ஓடத் தொடங்கியுள்ளனர். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பேக்யார்டு அல்ட்ரா நிகழ்வாகும். போட்டியின் வடிவம் என்ன? (Last Person Standing) இது வழக்கமான மாரத்தான் போட்டி போன்றதல்ல. எல்லைகள் அற்ற, ‘கடைசி நபர் எஞ்சும் வரை’ நடைபெறும் ஒரு வித்தியாசமான போட்டியாகும். போட்டியாளர்கள் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை 6.7 கி.மீ தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்குள் முடிக்கத் தவறியவர்களோ அல்லது அடுத்த மணிநேரத்திற்கான விசில் ஒலிக்கும்போது தொடக்க கோட்டில் ...