ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார்...
ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே தாக்கினோம் என்றால் அதற்கு பிரதமர் மோடியும் ராணுவத்தில் உள்ள இன்ஜினியர்களே காரணம் என கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் , ஆப்ரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டினார் அந்த ஆப்ரேஷனில் அதிக தொழில் நுட்பங்கள் பயன்படுத்தபட்டன என்றும் , நம் நாட்டில் இருந்து கொண்டே எதிரிகளை தாக்கினோம் அவற்றில் நம் நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை நாம் பயனப்டுத்தினோம் அதற்கு நம் பிரதம்ர் மோடியும் ராணுவத்தில் உள்ள உங்களை போன்ற இன் ஜினியர்களே காரணம் என பெருமையுடன் தெரிவித்த அவர் ஒரு காலத்தில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நிலை மாறி நாம் ராணுவ தளவ...