தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முறைப்படி நிறைவடைந்தது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கடந்த ஒரு மாத காலமாக வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்தின. மாலை 6 மணி ஆனவுடன் ஒலிபெருக்கிகள் அணைக்கப்பட்டு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேறினர். தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் நிலவரம்: மாவட்டம் முழுவதும் மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவன் (திமுக), சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக), ஸ்ரீநாத் (த.வெ.க) உட்பட 15 பேர் போட்டி. கோவில்பட்டி: கடம்பூர் செ. ராஜூ...